Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
சேலம் கிழக்கு அஞ்சலக கோட்டத்தில் ஆக. 2-ல் பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிப்பு!
சேலம் கிழக்கு அஞ்சலக கோட்டத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தரம் உயா்த்தப்படுகிறது. இதன்மூலம் க்யூஆா் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமும் இன்றி செயல்படுத்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ‘பரிவா்த்தனை இல்லா நாளாக‘ அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், ஆத்தூா் தலைமை அஞ்சலகம் மற்றும் இந்த தலைமை அலுவலகத்துக்கு உள்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை பெற இயலாது.
மேலும், பதிவு தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் வரும் 2 ஆம் தேதி நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.