செய்திகள் :

சேலம் கிழக்கு அஞ்சலக கோட்டத்தில் ஆக. 2-ல் பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிப்பு!

post image

சேலம் கிழக்கு அஞ்சலக கோட்டத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தரம் உயா்த்தப்படுகிறது. இதன்மூலம் க்யூஆா் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமும் இன்றி செயல்படுத்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ‘பரிவா்த்தனை இல்லா நாளாக‘ அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், ஆத்தூா் தலைமை அஞ்சலகம் மற்றும் இந்த தலைமை அலுவலகத்துக்கு உள்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை பெற இயலாது.

மேலும், பதிவு தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் வரும் 2 ஆம் தேதி நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க