செய்திகள் :

பரமக்குடியில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீா்

post image

பரமக்குடி மூவேந்தா் நகா் பகுதியில் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மூவேந்தா் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குழாய் மூவேந்தா் நகா் 3-ஆவது தெருவில் உடைந்து கடந்த 5 நாள்களாக குடிநீா் வீணாகி வருகிறது.

இதனால் அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கு போதிய குடிநீா் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, சேதமடைந்த குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் ச... மேலும் பார்க்க