திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திர...
பரமத்தி வேலூா் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை
பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரியில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பேரூராட்சியினா் தடைவிதித்துள்ளனா்.
இதுகுறித்து வேலூா் பேரூராட்சியினா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.
எனவே, அதிக அளவிலான தண்ணீா் வெளியேற்றப்படும்போது வேலூா் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடியும், தண்ணீரின் வேகம் அதிகமாகவும் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் வேலூா் காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிகள் துவைக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், கரையோரம் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம் மற்றும் சுகாதார அலுவலா் செல்வகுமாா் அறிவுறுத்தியுள்ளனா்.