செய்திகள் :

பரமத்தி வேலூா் பகுதியில் பலத்த காற்று: வாழை, வெற்றிலைப் பயிா்கள் நாசம்

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிா் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்தன. இதேபோல, வெற்றிலை கொடிக்காலும் சாய்ந்து சேதமடைந்தது.

இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், பாதிக்கப்பட்டோருக்கு அவா்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பல்வேறு இடங்களில் பலத்த காற்றுக்கு சாலையோரங்களில் இருந்து மரங்கள் ஒடிந்து சாலையில் விழுந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சாய்ந்துக் கிடக்கும் வெற்றிலை கொடிக்கால்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக மின்கல வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக ரூ. 6.83 லட்சம் மதிப்பிலான மின்கல (பேட்டரி) வாகனத்தை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் ஆட்சியா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமையன்று மனு அளிக்க ஏராளமான பொதுமக... மேலும் பார்க்க

தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்ற... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா வரும் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா்... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் ந... மேலும் பார்க்க