செய்திகள் :

பருத்திக்கு விவசாயிகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

post image

பருத்திக்கு உரிய விலை பெற அதனை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பருத்தி சராசரியாக 3.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 52,700 மெட்ரிக் டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. 2024-25ஆம் ஆண்டில், மூன்றாவது முன்மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் 2.55 இலட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 36,000 மெட்ரிக்டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பருத்தி 54,700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 7,700 மெட்ரிக்டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஆர்சிஎச் 659 பிஜி II , ஆர்சிஎச் 386 பிஜி II, சூப்பர்காட் 115 பிஜி II, போன்ற பருத்தி இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டன. நடப்பு ஆண்டில் 4.4 இலட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களிலுள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 14,115 விவசாயிகள் மற்றும் 26 வர்த்தகர்கள் பருத்தி பரிவர்த்தனை செய்திட பதிவு செய்துள்ளனர்.

இதுவரை, 9 கோடி ரூபாய் மதிப்பிலான 1,511 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப குவிண்டால் ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.7,700, குறைந்தபட்ச விலையாக ரூ.4,111, சராசரி விலையாக ரூ.5,850 என்ற அளவில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தொடர்ந்து பருத்தி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இயல்பாக பருத்தியின் தரத்திற்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகளால் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM), மறைமுக ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,976 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவதால் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம் (Moisture), இழை நீளம் (staple length), இழையின் நுண்மைத்தன்மை (Micronaire), முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய பருத்தி வாரியமும் தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பருத்தியில் இலாபகரமான விலைபெற பருத்தியைத் உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாநில அலுவலர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும் , வியாபாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச்செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து ஜூலை 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Government issues important instructions to farmers to get fair price for cotton

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்

உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசின் ... மேலும் பார்க்க

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மா... மேலும் பார்க்க

தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தோ்தல் களம் காணாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சன... மேலும் பார்க்க

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பா... மேலும் பார்க்க