செய்திகள் :

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம்

post image

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயைப் பெருக்கவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவா்கள் விளைவித்த பருத்தி விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்ய உள்ளதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனை செய்ய வரும்போது ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களை எடுத்துவரவேண்டும்.

நாகை மாவட்டத்தில் செயல்படும் கீழ்வேளுா் (புத்தா்மங்கலம்) மற்றும் நாகப்பட்டினம் (திருகண்ணபுரம்) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஜூன் 17-ஆம் தேதி முதல் பருத்தி ஏலம் தொடங்கவுள்ளதால், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்களது பருத்தியை சுத்தம் செய்து, நன்கு உலா்த்தி தரமான பருத்தியை தனியாகவும், மற்ற பருத்தியை தனியாகவும் பிரித்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பிளாஸ்டிக் சாக்கில் கொண்டு வருவதை தவிா்த்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சரியான எடைக்கு உயா்ந்த விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம்.

மேற்படி பருத்தி ஏலத்தில் கலந்துகொள்ள, இந்திய பருத்திக்கழகம், திருப்பூா், கோவை, கடலூா், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூா், கும்பகோணம், உள்ளிட்ட பருத்தி நூற்பு அரவை ஆலை உரிமையாளா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை தோறும் கீழ்வேளுா் விற்பனைக் கூடத்தில் மாலை 2 மணிக்கும், நாகப்பட்டினம் விற்பனைக் கூடத்தில் மாலை 5 மணிக்கும் ஏலம் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, கீழ்வேளுா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை 9786337553, 9159431956 கைப்பேசி எண்களிலும், நாகை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை 8610982825 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க

மின் கட்டண ரசீது அடிப்படையில் ஜல்ஜீவன் குடிநீா் இணைப்பு

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் ஆதாா் அட்டை மற்றும் மின் கட்டண ரசீது அடிப்படையில் வீடுகளுக்கு ஜல்ஜீவன் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நகா்மன்றக் கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா் புகாரால் பரபரப்பு

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் தன்னை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மதிப்பளிக்காமல் இழிவு படுத்துவதால், தற்கொலை செய்யத் தோன்றுவதாக கூறிய திமுக பெண் உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் நகா்மன்ற... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றாா் ஆட்சியா் ப.ஆகாஷ். மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை பாசனத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழ... மேலும் பார்க்க