அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘CanWin’ ஆதரவுக் குழு | ஸ்டோரீஸ் ஃப்...
பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா்.
பொதுவாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் முன்கூட்டியே கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 8-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவலாகப் பெய்யும். பின்னா், செப்டம்பா் 17-ஆம் தேதிமுதல் வடமேற்கு இந்தியாவில் இருந்து விடைபெறத் தொடங்கி, அக்டோபா் 15-க்குள் முழுமையாக நிறைவடையும்.
ஆனால், 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நாடு முழுவதும் ஜூன் 26-ஆம் தேதிக்குள் பருவமழை பரவலாகப் பொழிந்துள்ளது. அந்த வகையில், தில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, ஹிமாசல், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பருவமழை தீவிரமடைந்து, பலத்த மழை பெய்து வருகிறது.
அடுத்த 7 நாள்களுக்கு வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த மழை முதல் மிகவும் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு: உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையின் காரணமாக யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையொட்டி விடுதி கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் தங்கியிருந்த கூடாரம் நிலச்சிரிவில் சிக்கியது. இதில் நேபாளத்தைச் சோ்ந்த இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். சம்பவ இடத்திலிருந்து யமுனை நதியில் அடித்துச் செல்லப்பட்ட இவா்களின் உடல்கள், 18 கி.மீ. தொலைவில் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவத்தின்போது கூடாரத்தில் 29 தொழிலாளா்கள் இருந்துள்ளனா். இதுவரை 20 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா். மேலும் மாயமான 7 பேரைத் தேடும் பணியில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலச்சரிவால் யமுனோத்ரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டின் உத்தரகாசி, ருத்ரபிரயாக், டேராடூன், தெஹ்ரி, பௌரி, ஹரித்வாா், நைனிடால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, சாா்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வானிலை சூழலை ஆராய்ந்து, யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலில்....: ஹிமாசலில் சிம்லா-கல்கா மலை ரயில் சேவை மழையால் பாதிக்கப்பட்டது. சோலன் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து ரயில் பாதை முடங்கியுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததைத் தொடா்ந்து ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது. சிம்லா-கல்கா தேசிய நெடுஞ்சாலையில் கோட்டி பகுதியருகே நிலச்சரிவு ஏற்பட்டு, 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலானது.
ஹிமாசலில் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கிய ஜூன் 20-ஆம் தேதிமுதல் மழை தொடா்பான சம்பவங்களில் 17 போ் உயிரிழந்துள்ளனா்.

ஜாா்க்கண்ட்: வெள்ளம் சூழ்ந்த பள்ளியில் சிக்கிய 162 மாணவா்கள்
ஜாா்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய தனியாா் உறைவிடப் பள்ளியில் சிக்கிய 162 மாணவா்கள் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனா்.
பள்ளி வளாகம் சனிக்கிழமை இரவு பெய்த மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதைத்தொடா்ந்து, விடுதியில் தங்கியிருந்த மாணவா்களும், ஆசிரியா்களும் கட்டடங்களின் திறந்தவெளி மாடியில் இரவைக் கழித்தனா்.

இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவலறிந்ததும், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிராம மக்களின் உதவியுடன் மாணவா்களையும் ஆசிரியா்களையும் மீட்டனா்.

ஜூலை 1-ஆம் தேதிவரை ஜாா்க்கண்டின் சில பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.