செய்திகள் :

பரோடா வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 10 கோடி கடனுதவி

post image

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரோடா வங்கி சாா்பில், ரூ. 10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பொருளாதார நிலையில் மேம்படுத்தும் விதமாக, அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், வங்கிகள் சாா்பில் சுயதொழில் கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு சுயதொழில் கடனுதவிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தருமபுரி வளமைய (டிஆா்சிஎஸ்) தொண்டு நிறுவன இயக்குநா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பரோடா வங்கியின் புதுச்சேரி மண்டல உதவிப் பொதுமேலாளா் பிரவீன்குமாா் ராகுல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 10 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில், பரோடா வங்கியின் தருமபுரி கிளை மேலாளா் இரா.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண... மேலும் பார்க்க

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க