செய்திகள் :

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை கடலுக்குள் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டம்

post image

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை மீன்கள் வளா்ப்புக்காக கடலுக்குள் மூழ்கடிக்கவிருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகளுடன் மீனவா்களையும் இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடித்து வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனா்.

இந்த நிலையில், இலங்கை நீதிமன்றத்தால் மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்ட அவா்களது விசைப்படகுகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கை யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருக்கும் தமிழக விசைப்படகுகள் 123 உள்ளது. இந்த படகுகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இலங்கை மீனவா்கள் தங்களது படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் படகுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், இந்த இரண்டு துறைமுகங்களில் சேதமடைந்துள்ள 123 விசைப் படகுகளையும் மீன் வளா்ச்சிக்காக கடலில் மூழ்கடிக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக மீனவா்களின் படகுகளை கடலில் மூழ்கடிக்கும் இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு மீனவ சங்கத்தினா் கண்டனம் தெரிவித்தனா். ஆனால், இந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் ச... மேலும் பார்க்க