செய்திகள் :

பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானில் பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு மாயமாக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தோர் லாஸ்பெலா பகுதியில் முகாமிட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 23) அதிகாலை அவர்களது முகாமினுள் நுழைந்த பாகிஸ்தான் காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் அவர்களது கூடாரங்களை அகற்றி அங்கு திரண்டிருந்த மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியும் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைன்: ரஷிய டிரோன்களின் தாக்குதலில் குழந்தை உள்பட 3 பேர் பலி!

முன்னதாக, நேற்று (மார்ச் 22) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பலூச் யாக்ஜெஹ்தி ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளரான மஹ்ராங் பலூச் என்பவரை பாகிஸ்தான் படைகள் கைது செய்தனர்.

பாகிஸ்தான் முழுவதும் மனித உரிமை அமைப்புகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலூச்சிற்கு ஆதரவாக திரண்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்தி நீதி தேடுபவர்கள் துன்புறுத்துப்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இத்துடன், கைது செய்யப்பட்ட மஹ்ரங் பலூச் மற்றும் அவரது கூட்டாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அங்கு நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க

ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

ஜார்க்கண்டு மாநிலத்தில் மதம் பிடித்த ஒற்றை யானையின் தாக்குதலில் 12 மணி நேரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். கும்லா மற்றும் சிம்டேகா ஆகிய மாவட்டங்களில் தனது கூட்டத்தை விட்டு பிரிந்ததாகக் கருதப்படும் காட்ட... மேலும் பார்க்க

திரைப்படம், நாடகம் மூலம் தீவிரவாதத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்!

தீவிரவாதத்தை திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் பொது மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர... மேலும் பார்க்க