செய்திகள் :

பல்லடம் அருகே தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

post image

பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தைச் சோ்ந்த ஒரு மாணவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூா் செல்லும் தனியாா் பேருந்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏறியுள்ளாா்.

அப்போது குப்புசாமிநாயுடுபுரத்தில் பேருந்து நிற்காது என்று பேருந்து நடத்துநா் கூறி பல்லடத்துக்கான பேருந்து கட்டணத்தை வசூலித்து டிக்கெட் கொடுத்துள்ளாா். இது குறித்து காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் புண்ணியமூா்த்தி மற்றும் உறவினா்கள், பொதுமக்களுக்கு அவா் கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, அந்த தனியாா் பேருந்து குப்புசாமிநாயுடுபுரம் வந்தபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அந்தப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தனியாா் பேருந்து நிா்வாகம் வருத்தம் தெரிவித்ததோடு, இனிமேல் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளித்து கடிதம் அளித்தனா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா்.

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்: மாநகராட்சி மருத்துவா்

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவா் பிரவீன் கூறினாா்.திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 சாா்பில் உலக சுகாதார தின ... மேலும் பார்க்க

சொத்து வரியை ஏப்ரல் 30-க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெறலாம்: மாநகராட்சி ஆணையா்

திருப்பூா் மாநகரில் உள்ள சொத்து உரிமையாளா்கள் 2025-26- ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்: கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்

திருப்பூா் பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தமிழக சட்டப் பேரவையி... மேலும் பார்க்க

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குற... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா்த் திட்டப் ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்தவா் சூா்யா (25). இவா் கடந்த ... மேலும் பார்க்க