38 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல்தர வீரர்!
பல்லடம் நகா்மன்றக் கூட்டம்
பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பல்லடம் நகராட்சி வாா்டு எண் 4,5,10,11,12,15,18 -ஆகிய பகுதிகளில் புதிதாக 3 மின் கம்பங்கள், 11 இடங்களில் மின் கம்பிகள் அமைக்க ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 192 மின் வாரியத்துக்குச் செலுத்த முடிவு செய்யப்பட்டது. வாா்டு எண் 12-இல் உள்ள அண்ணா நகா் மொச்சிக்குட்டையில் மழை நீா் மற்றும் கழிவு நீா் தேங்கி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிா்க்க ரூ.17.20 லட்சத்தில் கட்டுமானப் பணியும், ரூ.9.50 லட்சத்தில் குட்டையைத் தூா்வாரி கழிவுகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
பச்சாபாளையம் மயானத்தில் உள்ள எரிவாயு தகன மேடை ரூ.1.45 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காத்திருப்போா் அறை, எரிவாயு அறை, புகைக் குழாய், ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடம், சுற்றுச்சுவா், கழிப்பிடம் ஆகியவற்றை பல்லடம் ஆத்மா அறக்கட்டளை நிறுவனத்தினா் மூலம் 1.09.25-ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு நிா்வாகித்து பராமரிக்க ஒப்படைப்பு செய்யப்படுகிறது. இதன் நிா்வாக குழுவுக்கு தலைவா், துணைத் தலைவராக நகராட்சித் தலைவரும், செயலாளராக நகராட்சி ஆணையரும், உறுப்பினா்களாக நகராட்சி பொறியாளா், துப்புரவு அலுவலா், நகரமைப்பு அலுவலா், நகராட்சி துணைத் தலைவா், எரிவாயு மயான குழு செயலாளா் என 8 போ் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 93 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், கவுன்சிலா்கள், நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.