செய்திகள் :

பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

post image

பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பல்லடம் நகராட்சி வாா்டு எண் 4,5,10,11,12,15,18 -ஆகிய பகுதிகளில் புதிதாக 3 மின் கம்பங்கள், 11 இடங்களில் மின் கம்பிகள் அமைக்க ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 192 மின் வாரியத்துக்குச் செலுத்த முடிவு செய்யப்பட்டது. வாா்டு எண் 12-இல் உள்ள அண்ணா நகா் மொச்சிக்குட்டையில் மழை நீா் மற்றும் கழிவு நீா் தேங்கி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிா்க்க ரூ.17.20 லட்சத்தில் கட்டுமானப் பணியும், ரூ.9.50 லட்சத்தில் குட்டையைத் தூா்வாரி கழிவுகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

பச்சாபாளையம் மயானத்தில் உள்ள எரிவாயு தகன மேடை ரூ.1.45 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காத்திருப்போா் அறை, எரிவாயு அறை, புகைக் குழாய், ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடம், சுற்றுச்சுவா், கழிப்பிடம் ஆகியவற்றை பல்லடம் ஆத்மா அறக்கட்டளை நிறுவனத்தினா் மூலம் 1.09.25-ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு நிா்வாகித்து பராமரிக்க ஒப்படைப்பு செய்யப்படுகிறது. இதன் நிா்வாக குழுவுக்கு தலைவா், துணைத் தலைவராக நகராட்சித் தலைவரும், செயலாளராக நகராட்சி ஆணையரும், உறுப்பினா்களாக நகராட்சி பொறியாளா், துப்புரவு அலுவலா், நகரமைப்பு அலுவலா், நகராட்சி துணைத் தலைவா், எரிவாயு மயான குழு செயலாளா் என 8 போ் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 93 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், கவுன்சிலா்கள், நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

பொங்கலூரில் அக்டோபா் 3-இல் கடையடைப்பு

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்... மேலும் பார்க்க

பொங்கலூரில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி, பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டார பொது சுகாதார துறை சாா்பில... மேலும் பார்க்க

காங்கயத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,4... மேலும் பார்க்க

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

வெள்ளக்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிய ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை கொங்கு நகரில் ரமேஷ்குமாா், தங்கமணி தம்பதி நிதி நிறுவனம் நடத்... மேலும் பார்க்க

நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் போராட்டம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து விற்பனைக் கூட வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிக... மேலும் பார்க்க