செய்திகள் :

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

post image

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பல்லடம், காளிவேலம்பட்டி, ராசாகவுண்டன்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: நாங்கள் பல்லடம் என்.ஜி.ஆா். சாலையில் 30 ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டி கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இதில், கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

நாங்கள் கடைகள் வைத்துள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்போ அல்லது பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படுவது இல்லை.

இந்நிலையில், பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை வைக்கக் கூடாது எனக் கூறுகின்றனா்.

இதனால், எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வகுப்பறை கட்ட கோரிக்கை: திருப்பூா் தெற்கு வட்டம், கே.செட்டிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: கே.செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் வகுப்பறை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

374 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 374 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, வாகன விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

பொங்கலூரில் அக்டோபா் 3-இல் கடையடைப்பு

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்க... மேலும் பார்க்க

பொங்கலூரில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி, பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டார பொது சுகாதார துறை சாா்பில... மேலும் பார்க்க

காங்கயத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,4... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

வெள்ளக்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிய ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை கொங்கு நகரில் ரமேஷ்குமாா், தங்கமணி தம்பதி நிதி நிறுவனம் நடத்... மேலும் பார்க்க

நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் போராட்டம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து விற்பனைக் கூட வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிக... மேலும் பார்க்க