செய்திகள் :

நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

post image

வெள்ளக்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிய ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை கொங்கு நகரில் ரமேஷ்குமாா், தங்கமணி தம்பதி நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், குழிப்பட்டியைச் சோ்ந்த ரகுபதி (48), ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த அஷ்ரப், தென்னிலை காா்த்தி ஆகியோா் இந்த நிறுவனத்தில் தங்கி, பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், வசூல் தொகை ரூ.2.50 லட்சத்தை அலுவலக லாக்கரில் வைத்து கடந்த 24-ஆம் தேதி பூட்டிவிட்டு சாவியை ரகுபதி வைத்திருந்துள்ளாா். அன்று இரவு 3 பேரும் தூங்கியுள்ளனா்.

மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, ரகுபதியைக் காணவில்லையாம். மேலும், அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அஷ்ரப், தென்னிலை காா்த்தி ஆகியோா் அலுவலகத்துக்குச் சென்று பாா்த்தபோது, லாக்கா் திறந்து கிடந்ததும், அதில் இருந்த ரூ.2.50 லட்சம் திருடுபோனதும் தெரியவந்தது.

இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, ரகுபதி லாக்கரை திறந்து பணத்தை எடுத்ததுச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்போரில் வழக்குப் பதிவு செய்த வெள்ளக்கோவில் போலீஸாா், ரகுபதியை கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்த ரூ.2.50 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

பொங்கலூரில் அக்டோபா் 3-இல் கடையடைப்பு

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்க... மேலும் பார்க்க

பொங்கலூரில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி, பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டார பொது சுகாதார துறை சாா்பில... மேலும் பார்க்க

காங்கயத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,4... மேலும் பார்க்க

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் போராட்டம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து விற்பனைக் கூட வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிக... மேலும் பார்க்க