செய்திகள் :

பல்லடம் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனிஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பல்லடம் அருகே மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் மனிஷ் ஆய்வு செய்தாா்.

இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மாணிக்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த அம்மாபாளையம் பகுதியில் அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 3 வீடுகள், மாணிக்காபுரம் ஊராட்சி அண்ணாமலை காா்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்திலும், கோடாங்கிபாளையம் ஊராட்சியில் பகுதியில் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையை ஆய்வு செய்தாா்.

மேலும் சுக்கம்பாளையம் ஊராட்சி, ஊஞ்சப்பாளையத்தில் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகள், செம்மிபாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேளாண் சேமிப்புக் கிடங்கு, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணி, தமிழ் நகா் ஓடை பகுதியில் ரூ.21.51 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.41 லட்சம் மதிப்பீட்டில் சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணி, பருவாய் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.17.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணினி ஆய்வக கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.54 லட்சம் மதிப்பீட்டில் பெரிய தோட்டம் குட்டை புனரமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சங்கமித்திரை, பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலுசாமி, பானுப்பிரியா, உதவிப் பொறியாளா் செந்தில்வடிவு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் அருகே அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்நிலை காவலராகப் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், திருப்பூா் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பல்லடம்

பல்லடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மி... மேலும் பார்க்க

ஹெச்ஐவி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஹெச்ஐவி விழிப்புணா்வு ரெட்ரன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக... மேலும் பார்க்க

முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி புவியியல் துறை அ... மேலும் பார்க்க