செய்திகள் :

பல்லடம் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வியாபாரிகள் கோரிக்கை

post image

பல்லடம் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை மைதானம் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை செயல்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், வாரச் சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வாரச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: வாரச் சந்தை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் ரூ.30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை வா்த்தகம் நடைபெறுகிறது.

ஆனால், வாரச் சந்தை வளாகத்தில் முறையான குடிநீா், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பெண் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்ரனா். எனவே, வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இருசக்கர வாகனம் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா். காங்கயம் -திருப்பூா் சாலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (54). இவா் வெள்ளக்கோவிலில் விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

அவிநாசி வட்டம் குப்பாண்டம்பாளையத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவா் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க