செய்திகள் :

``பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' - 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த கிராம மக்கள்

post image

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ளது சாடோங்கின் கிராமம். லாங்டிங்கிலிருந்து தொலைதூரம் என்பதால் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது.

அரசின் மற்ற சேவைகளை விட அடிப்படை வசதிகளான சாலை, பாலம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கூட அந்த கிராமத்தில் இல்லை.

பாலம் கட்டித் தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து, பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

மூன்றே நாளில் கட்டிமுடிக்கப்பட்ட பாலம்
மூன்றே நாளில் கட்டிமுடிக்கப்பட்ட பாலம்

இந்த நிலையில், சாடோங் மற்றும் அதன் அண்டை கிராமங்களான ஓசாகோ, லாங்மாய், சாஜாம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் `நமது தேவையை நாமே நிறைவேற்றிக்கொள்ளலாம்' என்ற முடிவுக்கு வந்தனர்.

பல கிராமங்களை இணைக்கும் பாலம் மிக அத்தியாவசிய தேவையாக இருந்திருக்கிறது. எனவே, கிராம மக்கள் ஒன்றுதிரண்டு பாலத்தை கட்ட பணத்தையும், உழைப்பையும் கொடுத்தனர்.

பாலக் கட்டுமான வேலையில் இருக்கும் ஆண்களுக்கு உணவு தயாரித்தும், தேநீர் பரிமாறியும் பெண்கள் இந்த முயற்சியை ஆதரித்தனர். இப்படியாக கிராம மக்களின் முழு முயற்சியால் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய சாடோங் மாணவர் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் வாங்சு, ``சாடோங் கிராமம் அருணாச்சல மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது வாஞ்சோ பழங்குடியினரின் தாயகமாகும். இந்தப் பகுதியில் சரியான சாலைகள், பாலங்கள் இல்லாததால், குறிப்பாக மழைக்காலங்களில், இந்த கிராமங்கள் துண்டிக்கப்படுகின்றன.

அருணாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்

இந்த கிராமங்களை இணைக்கும் இரண்டு சாலைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்று, சிபாம் வழியாக செல்லும் PMGSY சாலை. வாகனம் ஓட்ட முடியாது. லாங்டிங் செல்ல கிட்டத்தட்ட 40 கி.மீ. தூரம் செல்லவேண்டி இருக்கிறது.

எங்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதாலும், நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் விரக்தியடைந்த நாங்கள், அதை செய்து முடித்தோம்.

மரப்பலாம் கட்டுமானப் பணிகளை முடிக்க எங்களுக்கு சுமார் மூன்று நாள்கள் ஆனது. புதிய பாலம் உள்ளூர் பயணத்தை கணிசமாக எளிதாக்கும். அப்பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளுக்கு சுகாதாரம், கல்வி, சந்தைகளுக்கான போக்குவரத்தை மேம்படுத்தும்." என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

”என் மகன் அழகாக இருக்கிறான்..” - நகரம் முழுவதும் விளம்பரப்படுத்திய தந்தை! எவ்வளவு செலவு செய்தார்?

ஜப்பானின் டோக்கியோவில் தனது மகனை, மக்கள் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் புகைப்படத்தை அவரின் தந்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 6 கோடி வரை செலவு செய்துள்ளார்.டோக்கியோவில் ... மேலும் பார்க்க

AC: ”இனிமேல் ஏசி-யை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்” - மத்திய அரசின் புதிய விதிகள் என்னென்ன?

ஏசிகளில் இனிமேல் 20 டிகிரிக்கு கீழ் வைக்க முடியாத அளவிற்கு, அதனை மாற்ற உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.ஏர் கண்டிஷனர் தற்போது ஆடம்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை பாக்குறீங்களா? இந்தியாவில் நிறைய சொத்து சேர்ப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

ஹாய், எப்படி இருக்கீங்க!நீங்க வெளிநாட்டில் வசிக்கும்/வேலை செய்யும் இந்தியரா? இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இந்தியாவுக்கு திரும்பி வந்துருவீங்களா?மீண்டும் உங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும்போது, யார் கையையு... மேலும் பார்க்க

மருமகளிடம் கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார் - எங்கே நடந்தது இந்த கொடுமை?

பெண்ணிடம் வரதட்சணையாக அவரது கிட்னியை கேட்ட மாமியார் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.தீப்தி என்ற பெண் பீகாரில் உள்ள முசாபர்பூரில் 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆகி சென்றுள்ளார். ஆரம்பத்தில் ... மேலும் பார்க்க

மாதம் ரூ.15,000 முதல் ரூ.1.26 லட்சம் வரை ; இந்தியா டு அமெரிக்கா... விந்தணு தானமும் வருமானமும்!

சமீபத்தில் ஒரு நபர் தனது விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று சமூக ஊடகங்களில் கூறியதுடன் தனது வருமானம் குறித்தும் பகிர்ந்திருந்தார். அவர் மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை க... மேலும் பார்க்க

JEE Advanced தேர்வு எழுதிய ChatGPT 3.0 ; கடினமான தேர்வில் அதன் ஸ்கோர் என்ன தெரியுமா?

JEE Advanced தேர்வு - இதை நம்ம ChatGPT எழுதினால் எப்படி இருக்கும்? அப்படி என்ன ஜே.இ.இ தேர்வி ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் தேர்வு உலக அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்று. இது இந்திய த... மேலும் பார்க்க