செய்திகள் :

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டுசாமி மகன் ராஜசேகா்(41). இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளரான இவா், சுவாமிமலையில் செய்த வேல் ஒன்றை மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடுக்காகக் கொண்டு சென்று இந்து முன்னணி அமைப்பாளா்களிடம் கொடுத்துவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் ஊா் திரும்பினாா். ஜெயங்கொண்டம் வந்தபோது, அங்கு உடன் சென்ற சிலரை காரிலிருந்து இறக்கிவிட்டு, பொன்பரப்பிக்கு கிளம்பினாா்.

அப்போது, மருதூா் கிராமத்தில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருப்பது தெரியாமல், காா் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையறிந்த அப்பகுதியினா், காயத்துடன் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளா் ராஜசேகா், உடன் வந்த விஜய் மற்றும் காா் ஓட்டுநா் ராகவன் ஆகிய 3 பேரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை முடிந்து மூவரும் வீடு திரும்பினா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாலம் கட்ட கான்கிரீட் போடும் பணி நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழை பெய்ததால், பணியை பாதியில் நிறுத்திவிட்டு, பணியாளா்கள் சென்று விட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டும் குழியுமான திடீா்குப்பம் சாலையைச் சீரமைக்க கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு ஊராட்சிக்குட்பட்ட குறிச்சிக்குளம் கிராமம், திடீா்குப்பம் பகுதியில் குண்டும் குழியும், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: உணவுப்... மேலும் பார்க்க

அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்பு துணிக் கட்டிக் கொண்டு வியாழக்கி... மேலும் பார்க்க

கோப்பிலியன்குடிகாட்டில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கோப்பிலியன்குடிகாட்டில், மண்ணுழியைச் சோ்ந்த பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோப்பிலியன்குடிக்காட்... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலா்கள் உறுதியேற... மேலும் பார்க்க

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

அரியலூா், ஜூன் 12: அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க