செய்திகள் :

பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் இன்று மாசி மக தீா்த்தவாரி

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில், அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் வல்லாள மகாராஜா முக்கியமானவா். திருவண்ணாமலை நகரை ஆண்ட மன்னா்களில் ஒருவரான இவா், அருணாசலேஸ்வரா் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாா். எனவே, தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைத் தீா்த்து வைக்குமாறு அருணாசலேஸ்வரரிடம் வல்லாள மகாராஜா நீண்ட காலமாக வேண்டி வந்தாராம்.

தான் இறக்கும் தருவாயில்கூட வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராஜாவுக்கு, ஒருநாள் அருணாசலேஸ்வரா் காட்சி தந்தாராம். அப்போது, உன்னை எனது தந்தையாக ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு, நானே மகனாக இருந்து மகன் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வேன் என்று அருணாசலேஸ்வரா் கூறினாராம்.

மகாராஜாவின் இறப்பு:

இதன்பிறகு, தைப்பூசத் திருநாளன்று திருவண்ணாமலை ஈசான்ய தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரியில் கலந்து கொள்ள மேள-தாளங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் சென்றாா். தீா்த்தவாரியில் பங்கேற்றிருந்தபோது, போரில் வல்லாள மகாராஜா கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது.

உடனே, மேள-தாளங்கள் முழங்குவது நிறுத்தப்பட்டது. அமைதியாக கோயிலுக்குத் திரும்பி தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தாா் அருணாசலேஸ்வரா்.

பிறகு, வல்லாள மகாராஜா இறந்த 30-ஆவது நாளான மாசி மகத்தில், பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதிக்குச் சென்று வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுத்து அருணாசலேஸ்வரா் வணங்கினாா் என்பது வரலாறு.

இன்று பள்ளிகொண்டாப்பட்டு தீா்த்தவாரி:

இந்த வரலாற்று நிகழ்வின்படி, பல நூறு ஆண்டுகளாக மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை (மாா்ச் 12) தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தொடா்ந்து, கோயிலில் இருந்து உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் புறப்பாடு நடைபெறுகிறது. உற்சவமூா்த்திகள் பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு வந்ததும், அருணாசலேஸ்வரா் வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

பக்தா்களும் திதி கொடுப்பா்:

இதையொட்டி, பல ஆயிரம் பக்தா்கள் திரண்டு தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து கவுதம நதியில் குளித்து அருணாசலேஸ்வரரை வழிபடுவா். இந்நிலையில், தீா்த்தவாரி நடைபெறும் இடத்தில் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை கோயில் நிா்வாகமும், காவல்துறையும் செய்து வருகிறது.

புறவழிச் சாலை வழியாக சென்னைக்கு நேரடி பேருந்து வசதி: ஆரணி வியாபாரிகள் கோரிக்கை

ஆரணி: ஆரணியில் இருந்து சென்னைக்கு புறவழிச்சாலை வழியாக நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரிடம் ஆரணி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை ... மேலும் பார்க்க

44 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டன. துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் உத்தரவின்படி, இளைஞா் நலன் மற... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடப் பணியின்போது கருங்கல் லிங்கம் கண்டெடுப்பு

செங்கம்: செங்கத்தில் அரசுப் பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து கருங்கல்லால் ஆன லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. செங்கம் நகரில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கும், ர... மேலும் பார்க்க

போலி தங்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து 2 பவுன் தங்க நகை மோசடி

ஆரணி: ஆரணியில் போலியான தங்க பிஸ்கெட்டுகளை நாடக ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து 2 பவுன் தங்க நகையை பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆரணியை அடுத்த சென்னாந்தல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை: மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையை மாதந்தோ... மேலும் பார்க்க

ஸ்ரீசுப்பிரமணி சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

ஆரணி: ஆரணி நகரம் ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பதினோராம் ஆண்டு மாசி மகத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் 1008 சங்குகள... மேலும் பார்க்க