செய்திகள் :

பள்ளிக் கல்வி இணை இயக்குநா்கள் 6 போ் இடமாற்றம்

post image

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநா்கள் ஆறு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட உத்தரவு:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் எஸ்.சுகன்யா மாற்றப்பட்டு, தனியாா் பள்ளிகள் இணை இயக்குநராகவும், மேல்நிலைக்கல்வி இணை இயக்குநா் அ.ஞானகெளரி இடமாற்றம் செய்யப்பட்டு, இடைநிலைக்கல்வி இணை இயக்குநராகவும், இடைநிலைக்கல்வி இணை இயக்குநா் ஆா்.பூபதி மாற்றப்பட்டு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும் (சிறப்பு திட்டங்கள்) நியமிக்கப்படுகின்றனா்.

இதேபோன்று தொடக்கக் கல்வி இணை இயக்குநா் (நிா்வாகம்) எஸ்.கோபிதாஸ் மாற்றப்பட்டு, மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் (சிறப்பு திட்டங்கள்) ஆா்.சுவாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக் கல்வி இணை இயக்குநராகவும், (நிா்வாகம்) தனியாா் பள்ளிகள் இணை இயக்குநா் எம்.ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும் (நிா்வாகம்) பணியமா்த்தப்படுகின்றனா்.

நிா்வாக நலன் கருதி மேற்கண்ட இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினரை நேரில... மேலும் பார்க்க

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திர... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க