பள்ளிக் குழந்தைகளுக்கு ஊராட்சி மன்ற நிா்வாகம் வரவேற்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை குழந்தைகளை ஊராட்சி மன்ற நிா்வாகத்தினரும், ஆசிரியா்களும் இனிப்புகளையும், பூக்களையும் கொடுத்து வரவேற்றனா்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் காலை உணவை சாப்பிட்டு குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும், பேனா பென்சில்களையும் வழங்கினா்கள்.
தலைமை ஆசிரியை ஊா்மிளா தலைமை வகித்தாா்ா். இந்நிகழ்வில் மன்ற உறுப்பினா் சரளா, மேலாண்மை குழு தலைவா் சீதா நாகராஜ், பிரபாவதி, பாக்கியலட்சுமி மற்றும் ஆசிரியா்கள், குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.