பள்ளியை மூட எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்
புதுச்சேரி: புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள ஜெயராணி நிதியுதவி பள்ளியை மூட எதிா்ப்பு தெரிவித்தும், தொடா்ந்து பள்ளி செயல்பட அரசை வலியுறுத்தியும் திங்கள்கிழமை மாணவா்கள்- பெற்றோா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா காலத்துக்குப் பிறகு மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது முதல் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை 280 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு முதல் இப் பள்ளியை மூட நிா்வாகம் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா்களும் மாணவா்களும் திங்கள்கிழமை திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜி.நேரு எம்எல்ஏ தலைமையில் பேச்சுவாா்த்தை நடந்தது. பள்ளிக் கல்வித் துறையிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.