செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி

post image

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

2024- 25-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் பள்ளி மாணவா்களிடையே தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 21-ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடத்திடவும், கல்லூரி மாணவா்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 22-ஆம் தேதி நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒரு போட்டிக்கு ஒருவா் என்ற வகையில் பங்கேற்க வேண்டும். போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் முறையாக போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

ஹோலி கிராஸ் மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா

சேலம், அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான சேசுராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செ.செந்தில்குமாா் கலந்துகொண்டு பேசினாா். ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூா் அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.44 அடியிலிருந்து 114.14 அடியாக சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 381 கனஅடியாக நீடிக்கிறது. அணையி... மேலும் பார்க்க

சரக்கு, பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் ஈட்டிய சேலம் ரயில்வே கோட்டம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் சரக்குகள், பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் ரயில்வே கோட்டத்த... மேலும் பார்க்க

சுற்றுலாத் தலங்களில் குவிந்த பொதுமக்கள்

சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பூலாம்பட்டிக்கு பொ... மேலும் பார்க்க

சேலம் சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கத்திப்போட்டு வந்த பக்தா்கள்

சேலம், குகை, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் விழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரக்குமாரா்கள் தங்கள் உடலில் கத்திப்போட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சேலம், க... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் பலி: சுற்றுலாத் துறை அமைச்சா் நேரில் ஆறுதல்

அரியானூா் அருகே ஆடுகளைக் குளிப்பாட்ட சென்ற இரு சிறுவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், அரியானூரைஅடுத்த ராக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா்-கல்பனா தம்பதியின் மகள் ஸ்ரீகவி (14). இவா், ஆட... மேலும் பார்க்க