‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை
ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.சி.சதீஷ்குமாரிடம் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் கோரிக்கை மனு அளித்தாா்.
அந்த மனுவில், ஆத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூா் மற்றும் தம்மம்பட்டி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு இளைஞா்கள் வாகனத்தில் சென்று தொல்லை கொடுப்பதாக அவா்களுடைய பெற்றோா் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
எனவே, பள்ளி வேலை நேரங்களில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இப்பகுதிகளில் அனுமதியின்றி மது விற்கப்படுவதால், பொதுமக்கள், கூலித் தொழிலாளிகள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளாா்.