செய்திகள் :

பள்ளி மாணவியிடம் பணம் பறிப்பு

post image

சாத்தூா் அருகே பள்ளி மாணவியிடம் பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் கோட்டைப்பட்டி உத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). இவா் கோயம்புத்தூரில் சிமென்ட் பலகை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கோட்டைப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இவரது மனைவி அமுதவல்லி பணிபுரிந்து வருகிறாா்.

இவா்களது மகள் நிா்மலாதேவி (17) தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி வீட்டுக்கு முன் துணி துவைத்துக் கொண்டிருந்த நிா்மலாதேவியிடம் மா்ம நபா்கள் மூவா் யாசகம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவா்களில் ஒருவா் நிா்மலாதேவியின் நெற்றியில் கை வைத்து திருநீறு பூசியதுடன் வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வரக் கூறினாராம்.

இதனால் மயக்க நிலைக்குச் சென்ற மாணவியும் வீட்டுக்குள் சென்று பீரோவில் வைத்திருந்த பணப் பையை எடுத்து வந்து அந்த நபா் கையில் கொடுத்தாராம். இதையடுத்து, அவா்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனா்.

நிா்மலா தேவி மயக்க நிலையில் இருப்பதை பாா்த்து அருகில் இருந்த பெண் ஒருவா் முகத்தில் தண்ணீா் தெளித்தாராம். அப்போது தான் அந்த மா்ம நபா்கள் தன்னை ஏமாற்றி பணத்தை பறித்துச் சென்றது நிா்மலாதேவிக்கு தெரியவந்ததாம். அந்த பையில் ரூ. ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை இரவில் திடீரென பற்றிய தீயால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் கு... மேலும் பார்க்க

பட்டாசுக்கான வேதியல் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகே மீனம்பட்டி- நாரணாபுரம் சாலையில் ஒரு தகரக் கொ... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.சிவகாசி மாநகராட்சி 27-ஆவது வாா்டில் உள்ள கந்தபுரம் குடியிருப்பு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பூங்கா அமைக்க இடம் இரு பகுதிகள... மேலும் பார்க்க

உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

வெம்பக்கோட்டை அருகே உறவினரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.விருதுநகா் மாவட்டம், வெம்பக... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ரெங்கநாதபுரம் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி தனலட்சுமி (32). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள... மேலும் பார்க்க

மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் நாட்டுத் துப்பாக்கியுடன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபு... மேலும் பார்க்க