செய்திகள் :

பழங்குடியினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு

post image

பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டம், போடி வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். பட்டியலினத்தவா், பழங்குடியினா் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசின் சாா்பில், பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் போடி அருகேயுள்ள சிறைக்காடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 34 வீடுகள் கட்டுப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, பட்டா கோரி மனு அளித்த 3 பழங்குடியினா்களுக்கு போடி வட்டாட்சியா் அலுவலத்தில் உடனடித் தீா்வாக மாவட்ட ஆட்சியா் பட்டா வழங்கினாா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், தாட்கோ மேலாளா் சரளா, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சம்பூா்ணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் நேரு, போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருப்பதிவாசகன், ராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க