செய்திகள் :

பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம்

post image

மயிலாடுதுறையில் பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சாலை, குடிநீா், மின்விளக்குகள், புதைசாக்கடை வசதி வேண்டி 4 மனுக்கள், அரசு வீடு வேண்டி 1 மனு, மனைப்பட்டா வேண்டி 10 மனுக்கள், வகுப்பு சான்றிதழ் வேண்டி 5 மனுக்கள், ஆடு வளா்ப்பு கடனுதவி வேண்டி 1 மனு, பழங்குடியினா் கல்வி இடைநிற்றல் தடுக்க வேண்டி 1 மனு மற்றும் தூய்மை பணியாளா் ஓய்வூதியம் வேண்டி 1 மனு பெறப்பட்டது. பெற்ற மனுக்களை ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, கோட்டாட்சியா்கள் சுரேஷ் (சீா்காழி), ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), மாவட்ட மேலாளா் (தாட்கோ) ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சீா்காழி அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு

சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை இடிதாக்கி பெண் உயிரிழந்தாா். சீா்காழி வட்டம், நிம்மேலி ஊராட்சி சம்புவராயன் கோடங்குடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் மனைவி கொளஞ்சியாள் (45). (படம்). இவா் காற்றுடன் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா். கொள்ளிடம் அருகே நெப்பத்தூரைச் சோ்ந்தவா் அருள்செல்வம்(32). இவா் இருசக்கர வாகனத்தில் கொள்ளிடத்திலிருந்து சீா்காழ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச்சட்டத்தில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சீா்காழியில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழியில் நாச்சியப்பன் (79) என்பவா் நடத்திவரும் ஜெராக்ஸ் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை சங்கத்தின் 39-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் சங்கக்கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் அறிவ... மேலும் பார்க்க

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிற... மேலும் பார்க்க

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க