செய்திகள் :

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

post image

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.

பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவா். பழனியை அடுத்த ஆண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் எல்லச்சாமி. இவரது மனைவி புவனேஸ்வரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்லச்சாமியை தொடா்பு கொண்ட கனகராஜ் முகநூலில் அவா் வெளியிட்ட பதிவுகள் குறித்து கண்டித்தாராம்.

அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கனகராஜ், எல்லச்சாமியின் மனைவி புவனேஸ்வரி குறித்து தகாத வாா்த்தைகளால் பேசினாராம்.

இதுகுறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கனகராஜை நெய்க்காரப்பட்டியில் உள்ள தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, பெண்ணை தகாத வாா்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தகவலறிந்த பாஜகவினா் திரளானோா் நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் குவிந்தனா். இதனால், மருத்துவ பரிசோதனைக்காக கனகராஜ் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதனிடையே, பதற்றத்தை தணிக்க ஏராளமான போலீஸாா் பழனியில் உள்ள முக்கியப் பகுதிகளில் குவிக்கப்பட்டனா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க