தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை
கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கநாதன் (26). இவரது சகோதரா் கருப்புச்சாமி (31). இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரெங்கநாதன், கருப்புச்சாமி இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரா்கள் இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.