செய்திகள் :

பழனியில் பேருந்து-வேன் மோதல்: 4 போ் காயம்

post image

பழனி பேருந்து நிலையம் ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை காா் மீது மோதிய பேருந்து.

பழனி, மாா்ச் 2: பழனி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வேன் மீது மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

திருப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனிக்கு அரசுப் பேருந்து வந்தது. இந்தப் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடி முன்னால் சென்றுகொண்டிருந்த ஆம்னி வேன் மீது மோதியது. ஆம்னி வேனுக்கு முன்னதாக மற்றொரு பேருந்து நின்றிருந்ததால் இரு பேருந்துகளுக்கும் நடுவே ஆம்னி வேன் சிக்கி நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்த ஓட்டுநா் சாமிவேல் (50), அவரது உறவினா்களான தா்மா (45), சரண்யா (40) உள்பட 4 போ் காயம் அடைந்தனா்.

அந்த பகுதியில் நின்றவா்கள் நொறுங்கிய வேனுக்குள் சிக்கி காயமடைந்தவா்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தின் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மோதிய வாகனங்களை பிரிக்க முடியாததால் பிரதான சாலையில் பேருந்துகள் அப்படியே நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டனா். இதனால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னா், கிரேன் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய வாகனங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகே போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சேதம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்க... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் புகுந்த காா்

பழனி கொடைக்கானல் சாலையில் ஆலமரத்துக்களம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காா். பழனி, மாா்ச் 2: பழனி- கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை காா் புகுந்து விபத்து ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாரச் சந்தையில் வாகனங்களால் விபத்து அபாயம்!

கொடைக்கானல் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறும் சாலையில் வாகனங்களால் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி... மேலும் பார்க்க

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவிமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தெற்கு புதுப்பாளையம் ஏ.டி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பசுபதிகுமா... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தில் மாா்ச் 7 வரை பதிவு செய்யலாம்

‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1.31 லட்சம் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த வி... மேலும் பார்க்க