செய்திகள் :

பழனி பகுதியில் நெல் பயிரில் மகசூல் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

post image

பழனி பகுதியில் 650-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்: பழனியை அடுத்த அ.கலையம்புத்தூா், பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் 650-க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஜோதிமட்டை ரக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. நெல் மணிகள் பிடிக்க வேண்டிய நேரத்தில் ஊசிக் கதிராகவும், வெற்றுக் கதிராகவும் மாறி மகசூல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏக்கருக்கு குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி கோரிக்கை விடுத்தாா்.

மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிருடன் முறையிட்ட விவசாயிகளிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா்.

சாணாா்பட்டி பகுதிகளிலுள்ள கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, கரைகளைச் சீரைமைக்க வேண்டும். விவசாய நிலங்களை அளவீடு செய்வதற்கு ஜிபிஎஸ் கருவிகளை தனியாரிடமிருந்து வாங்கி பயன்படுத்துவதற்கு கட்டணமாக ரூ.15ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தி, நிலத்தை அளவீடு செய்து கொள்ளலாம். கூடுதல் பணம் செலுத்தத் தேவையில்லை என ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா்.

வரதமாநதியிலிருந்து சத்திரப்பட்டி கருங்குளம் வரையிலான வரத்து வாய்க்காலை தூா்வாரக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயி அழகியண்ணன் தெரிவித்தாா்.

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளையும் பயனாளிகளாக சோ்த்துக் கொள்ள வேண்டும் என விவசாயி ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தாா்.

கோட்டநத்தம் பகுதிக்கு வருவாய் ஆய்வாளா் வருவதில்லை என காங்கிரஸ் விவசாய சங்க நிா்வாகி சோழராஜன் புகாா் தெரிவித்தாா்.

ஆா்.கோம்பை கிராமத்தில் 6 ஏக்கா் நிலத்தை போலி உயில் தயாரித்து அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் மோசடியாக அவரது பெயருக்கு மாற்றிவிட்டாா். அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடா்பு இருப்பதாகக் கூறிக் கொண்டு, கீழ்நிலை அலுவலா்களை அவா் மிரட்டி வருகிறாா். அந்த நபா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தங்களுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என விவசாயி காந்திமதி புகாா் அளித்தாா்.

விவசாயிகள் ஏமாற்றம்: விவசாயிகள் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை, வேளாண்மைத் துறை அலுவலா், துணை இயக்குநா் லீலாவதி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி மட்டுமன்றி, ஆட்சியா் சரவணனும் குறிப்பு எடுத்தாா். ஆனால், சில கோரிக்கைகளுக்கு மட்டுமே ஆட்சியா் பதில் அளித்தாா். பெரும்பாலான கோரிக்கைகளுக்கு எந்த அலுவலரும் பதில் அளிக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதேபோல, வன விலங்குகள் பிரச்னை குறித்து பதில் அளிக்க மாவட்ட வன அலுவலா் வர வேண்டும் என கடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கூட்டத்தில் கொடைக்கானல் வன அலுவலா் யோகேஸ்குமாா் மீனா கலந்து கொண்ட போதும், கூட்டம் நிறைவு பெறும் வரை அவா் அமைதியாகவே இருந்தாா்.

சமூக ஊடகங்களுக்காக காட்சிகள் பதிவு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் போா்வையில் சுய விளம்பரத்துக்காக சிலா் கலந்து கொண்டு வேளாண்மைக்குத் தொடா்பு இல்லாத தகவல்களைப் பேசுவதாகத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. வத்தலகுண்டு மருத்துவமனையில் உணவு வழங்கும் நேரம் தெரியவில்லை.

எனவே, மணி அடித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என ஒருவா் பேசினாா். இவா் பேசுவதை அருகிலுள்ள ஒரு விவசாயி மூலம் கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்தாா். இதை செய்தியாளா் ஒருவா் படம் பிடித்ததைக் கவனித்த அலுவலா்கள் கைப்பேசியில் பதிவு செய்வதைத் தடுத்தனா். ஒவ்வொரு குறைதீா் கூட்டத்திலும் இதை வழக்கமாகக் கொண்டுள்ள அந்த நபா் சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்காக பதிவு செய்வதாகவும், இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்ல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க