செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம்

post image

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்தச் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட பேரவைக் கூட்டம் வேங்கிக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.தியாகராஜன் தலைமை வகித்தாா். வட்டக் கிளைத் தலைவா்கள் ஏ.சுந்தரமூா்த்தி, எம்.எம்.ராமலிங்கம், எம்.ஆா்.நடராஜன், எம்.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் வி.ஆல்ப்ரெட் வரவேற்றாா்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ராமலிங்கம் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலத் தலைவா் கே.கங்காதரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் பி.சாது, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் (ஓய்வு) கே.இளங்கோவன், கல்வியாளா் மாதவ.சின்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா். தமிழகம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. போளூா் வட்டம், கரைப்பூ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்

ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நக... மேலும் பார்க்க

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் அருகே மேல்பள்ளிப்ப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டை அடுத்த பீமாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம... மேலும் பார்க்க