செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

post image

தருமபுரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முடக்கிவைக்கப்பட்டுள்ள உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும். இடைநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணையை (எண் 243 நாள்: 21.12.2023) உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். அனைத்துத் துறை பணியாளா்களுக் கிடையே உள்ள ஊதிய முரண்பாட்டை அரசு களைய வேண்டும். நிலுவையிலுள்ள பணப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

அந்த வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஜாக்டோ- ஜியோ சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா்கள் எம். சுருளிநாதன், பி.எம். கெளரன், ராசா. ஆனந்தன், கே. பாஸ்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் கோ. காமராஜ், ஜாக்டோ- ஜியோ நிதிக் காப்பாளா் கே. புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை, முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ. சேகா், பொருளாளா் எம். அன்பழகன், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் துரைவேல் , ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் முகமது இலியாஸ், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலாளா் பொன். தமிழ்மணி, தமிழ்நாடு உயா்நிலைப் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் பி. துரைராஜ், கிராம நிா்வாக முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் அகிலன், அனைத்து ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் பழனிசாமி, சத்துணவு ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சி. காவேரி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வ... மேலும் பார்க்க

அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீ... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கோபி (24). கோவையி... மேலும் பார்க்க

மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்

மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் வ... மேலும் பார்க்க