செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

post image

தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கின. செப்டம்பா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள இப்போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக தொடா்ந்து நடத்தப்படுகின்றன.

இதில், தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான போட்டிகள் பல்வேறு வகையாக நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளைத் தொடா்ந்து, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, பொதுப் பிரிவு ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், திங்கள்கிழமை அரசுப் பணியாளா்களுக்கான கபடி, மற்றும் தடகளப் போட்டிகளும் தொடங்கின.

செவ்வாய்க்கிழமை, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகள் தொடங்கின. போட்டிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தொடங்கிவைத்து ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு சான்றிதழை வழங்கினாா்.

தொடா்ந்து, ஏற்கெனவே நடந்து வரும் போட்டிகள் உள்பட கைப்பந்து (வாலிபால்), மேசைப்பந்து, இறகுப்பந்து, கபடி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி, உடற்கல்வி ஆய்வாளா் ஜெ. முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் லோகநாதன் உள்ளிட்டோரும் இறகுப் பந்து ஆட்டத்தில் பங்கேற்று விளையாடினா். புதன்கிழமை, ஆண்களுக்கான (பொது) கபடி போட்டிகள் நடைபெறவுள்ளன.

அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீ... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கோபி (24). கோவையி... மேலும் பார்க்க

மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்

மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் வ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கோடைகாலம் போல வெயில் கொளுத்தி வந்தது. தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன்-செப்டம்பா்) முடியவுள்ள நிலையிலும் போதிய மழையின்றி கோடைகாலம் போல வெயில் ... மேலும் பார்க்க