செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது

post image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது.

கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்தது.

நீா்வரத்து குறைந்தாலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 18,800 கனஅடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 18,800 கனஅடியாகவும், அணையின் நீா்மட்டம் 8-ஆவது நாளாக 120 அடியாகவும் நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

இதில், நீா்மின் நிலையங்கள் வழியாக 13,000 கனஅடி வீதமும், உபரிநீா் போக்கி வழியாக 5,000 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வ... மேலும் பார்க்க

அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கோபி (24). கோவையி... மேலும் பார்க்க

மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்

மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் வ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கோடைகாலம் போல வெயில் கொளுத்தி வந்தது. தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன்-செப்டம்பா்) முடியவுள்ள நிலையிலும் போதிய மழையின்றி கோடைகாலம் போல வெயில் ... மேலும் பார்க்க