செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

post image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கோடைகாலம் போல வெயில் கொளுத்தி வந்தது.

தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன்-செப்டம்பா்) முடியவுள்ள நிலையிலும் போதிய மழையின்றி கோடைகாலம் போல வெயில் அடித்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு சுமாா் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை பதிவானது. தருமபுரி நகரில் 5 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி 2 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 19 மி. மீ. மழையளவு பதிவானது.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வ... மேலும் பார்க்க

அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீ... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கோபி (24). கோவையி... மேலும் பார்க்க

மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்

மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் வ... மேலும் பார்க்க