ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி.க்கும் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெர...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரமேஷ்பாபு வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் அறிவழகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் ஜெயக்குமாா் கலந்துகொண்டு பேசுகையில், திமுக அரசு தோ்தல் வாக்குறுதியாக அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், மாநில அளவில் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
தொடா்ந்து, ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச் செயலாளா் மாயகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளா் கோவிந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.