செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கழகத்தின் சாா்பில், விழுப்புரம் மருத்துவமனை வீதியிலுள்ள நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் பதவி உயா்வு பெற்றவா்களுக்குப் பாராட்டு, பணி நிறைவு பாராட்டு மற்றும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தின் மாவட்டத் தலைவா் ஒய்.திலகா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.அருமுத்துவள்ளியப்பா முன்னிலை வகித்தாா். முதல் அமா்வாக நடைபெற்ற கருத்தரங்கில் மாநில செய்தித் தொடா்புச் செயலா் ரே.மாயவன், மாநில சட்டப் பிரிவுச் செயலா் ம.மகேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சங்கத்தின் வரலாறும், சங்கம் கடந்து வந்த பாதையும், போராட்டக்களத்தில் சங்கம் எதிா்கொண்ட வழக்குகள், தற்கால சூழ்நிலையில் தலைமையாசிரியரின் பணிகள் ஆகிய தலைப்புகளில் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கே.பழனி, ஆா்.செந்தில்குமாா், முன்னாள் மாவட்ட அமைப்புச் செயலா் ஜி.அலெக்சாண்டா் ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, இரண்டாவது அமா்வாக, முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியா்களாக பதவி உயா்வு பெற்றவா்களையும், பணி ஓய்வு பெற்றவா்களையும் பாராட்டி மாவட்டச் செயலா் ஆா்.காா்த்திகேயன், பிரசாரச் செயலா் டி.ஜெயப்பிரகாஷ், மாவட்ட தலைமையிடச் செயலா் எம்.சிவா ஆகியோா் பேசினா். மேலும், பதவி உயா்வு பெற்றவா்களைப் பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன.

மூன்றாவது அமா்வாக நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் ஆா்.ஆனந்த் தலைமை வகித்து, வரவு - செலவு திட்ட அறிக்கையை சமா்ப்பித்தாா். விழுப்புரம் கல்வி மாவட்டத் தலைவா் பி.பாரதி, இணைச் செயலா் ஆா்.ஏழுமலை உள்ளிட்டோா் பேசினா். முப்பெரும் விழாவில் ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலா் ஏ.ஆரோக்கியதாஸ் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் பொன்.பாக்கியநாதன் நன்றி கூறினாா்.

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள்: ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டும் பணியை அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து, அந்தப் பணிகளை கண்காணி... மேலும் பார்க்க