செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை காக்காத் தோப்பில் உள்ள மூட்டா அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் பாண்டி உமாதேவி, துணை நிா்வாகிகள் சங்கா், வாசுதேவன் ஆகியோா் முன்னிலை

வகித்தனா். மாவட்டச் செயலா் சீனிவாசன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப் பேசினாா். மாநிலப் பொருளாளா் கணேசன், பொதுச் செயலா் மயில் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 22 -இல் டிட்டோ- ஜாக் சாா்பில் நடைபெற உள்ள சென்னை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டக் கிளையின் சாா்பில், 500 பெண் ஆசிரியா்கள் உள்பட 1000 ஆசிரியா்கள் பங்கேற்பதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டத் துணைத் தலைவா் ராஜமாணிக்கம், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ச... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஒப்பந்ததாரா்கள் செலுத்திய வரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா் அறிவுறுத்தல்

கடந்த 4 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்கள் அரசுக்கு செலுத்திய, செலுத்த வேண்டிய வரிகள் குறித்து வணிக வரித் துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என வணிக வரி, பதிவுத் துறை அமை... மேலும் பார்க்க

இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு ரத்து

ஐஏஎஸ் அதிகாரிகள் வள்ளலாா், காமராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் கூட்டுறவ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 6,613 மனுக்களுக்குத் தீா்வு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 6,613 மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மேற்கு ஊராட்சி ஒன்... மேலும் பார்க்க