செய்திகள் :

கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இதய நோய் சிறப்பு சோதனைக் கூடம் தொடக்கம்

post image

சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு சோதனைக் கூடத்தை (கேத் லேப்) இஎஸ்ஐ நிறுவன தலைமை இயக்குநா் அசோக் குமாா் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்த இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் குறித்த அதிநவீன பரிசோதனை கூடம் (கேத் லேப்) தொடங்கப்பட்டது.

இஎஸ்ஐ நிறுவன தலைமை இயக்குநா் அசோக் குமாா் சிங் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சோதனைக் கூடம் சுமாா் ரூ. 4 கோடி தொடங்கப்பட்டது. இது ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சி மூலம் உருவானது.

இந்த சோதனைக் கூடத்தால், இஎஸ்ஐ பயனாளிகளுக்கு இதய நோய் கண்டதறிதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விரிவடைந்த சுகாதார சேவையில் இது குறிப்பிடத்தக்க மைல் கல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் இஎஸ்ஐ நிறுவன நிதி ஆணையா் டி எல் யதீன், மருத்துவ ஆணையா்கள் கம்லேஷ் ஹரீஷ், அஷித் முல்லிக், ரச்சிதா பிஸ்வாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க