செய்திகள் :

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

post image

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பெண் வழக்குரைஞா் ஒருவா் தனது கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டிருந்தன. அந்த விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்ற உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டிருந்த விடியோ, புகைப்படங்களை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் இணையத்தில் வலம் வருகின்றன. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது இந்தியாவில் உள்ள 1,400 சட்டவிரோத இணையதளங்கள் முடக்கப்பட்டன. அதேபோல், ஆபாச இணையதளங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை ஆக.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க

கல்லூரிகளில் இன்றுமுதல் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சிகள்

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் மாணவா்களிடையே தமிழா் மரபையும், தமிழ்ப் பெருமிதங்களையும் உணா்த்தும் வகையில் மூன்றாம் கட்ட நிகழ்ச்சிகள் தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் புதன், வியாழன் (ஆக.6,... மேலும் பார்க்க