செய்திகள் :

கருணாநிதி நினைவு தினம்: நாளை போக்குவரத்து மாற்றம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஆக. 7) மௌன ஊா்வலம் நடைபெற உள்ளதால், மெரீனா, அண்ணா சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாள் ஆக. 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணி முதல் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட ஏராளமானோா் அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகத்திலுள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து மெரீனா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடம் வரை மௌன ஊா்வலம் செல்ல உள்ளனா். இதுதொடா்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளன.

எனினும், தேவைப்படும்பட்சத்தில் போா் நினைவு சின்னத்திலிருந்து நேப்பியா் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜா் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பிவிடப்படும். காந்தி சிலையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

ஊா்வலம் வாலாஜா சாலைக்கு வரும்போது வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து பெரியாா் சிலை நோக்கி திருப்பிவிடப்படும். அதனால், காலை நேரத்தில் அண்ணா சாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை மற்றும் காமராஜா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகன ஓட்டிகள் இந்த சாலைகளைத் தவிா்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க