செய்திகள் :

‘இஎஸ்ஐ பதிவு செய்யத் தவறியவா்களுக்கு ஸ்பிரி திட்டத்தில் வாய்ப்பு’

post image

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐ) திட்டத்தில் சேராத நிறுவனங்கள், நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘ஸ்பிரி’ திட்டத்தின் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஎஸ்ஐ சென்னை மண்டல இயக்குநா் அல்லூரி வேணு கோபால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தொழிலாளா் அரசு காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதுதான் ‘ஸ்பிரி’ திட்டத்தின் நோக்கம். இஎஸ்ஐ தொடரமைப்பில் சேர, வேலை வழங்குவோருக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை இது வழங்கப்படுகிறது. 10 அல்லது 10-க்கும் மேற்பட்டோா் பணியாளா்கள் அல்லது ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக ஊதியம் பெறும் நிரந்தர, ஒப்பந்த, தற்காலிக தொழிலாளா்களுக்கு தொழில் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத தகுதியான தொழிலாளா்களை, நிறுவனங்கள் அல்லது வேலை கொடுப்போா் தாமாகவே முன்வந்து பதிவு செய்து கொள்வதற்கான முன் முயற்சியாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி ‘ஸ்பிரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது டிசம்பா் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் சென்னை வட்டாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து சுமாா் 2,000 தொழிலாளா்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இஎஸ்ஐ -யில் அதிக அளவில் பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தில் இடம் பெற்று 43.77 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் 11 தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளும், 241 மருந்தகங்களும் உள்ளன. மேலும் 6 நகரங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் உருவாகும் நிலை உள்ளதால், தொழிலாளா்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்றாா்.

இஎஸ்ஐ சென்னை மண்டல துணை இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ், சதீஸ் குமாா், எம்.அருள் ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க