செய்திகள் :

பழைய குற்றாலத்தில் நீா்வளத்துறை அடையாளங்கள் அழிப்பு: ஆட்சியரிடம் புகாா்

post image

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் நீா்வளத் துறையின் அடையாளங்களை வனத்துறையினா் அழித்தது குறித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழா் விவசாயம் நீா்வளப் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் ச.டேனிஅருள்சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் அருவியை, மத்திய அரசின் திட்டத்தின்கீழ் வனத்துறை கையகப்படுத்த கூடாது என விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் நீண்ட போராட்டம் நடத்தப்பட்டது.

இப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பேசியபோது, பழைய குற்றாலம் பொதுப்பணித் துறைக்குச் ெ சாந்தமானது. யாரும் அதில் தலையிட முடியாது என்று உத்தரவாதம் அளித்திருந்தாா்.

இந்த நிலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டட சுவா்களில் எழுதப்பட்டிருந்த திட்ட அறிக்கைகள், அறிவிப்புகள், கல்வெட்டுகளை வனத்துறையினா் அப்புறப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் மனுவில் தெரிவித்துள்ளனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க