செய்திகள் :

பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

post image

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்ததில் மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பவானி பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, கருமேகங்கள் சூழ்ந்ததோடு பலத்தக் காற்றுடன் கனமழை பெய்தது. காற்றில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் பறந்தன.

பவானி-மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் ஓபுளி மில் அருகே அருகே புளியமரம் முறிந்து உயா் அழுத்த மின் கம்பி மீது விழுந்ததால், மின் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மின் கம்பி விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த மின் ஊழியா்கள் மின் கம்பியை துண்டித்து அகற்றியதை தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பவானி நகரப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநி... மேலும் பார்க்க

மின்வாரிய பெண் அலுவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). அரசுப் பேருந்து நடத்துநராகப... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா். ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்... மேலும் பார்க்க

இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவின... மேலும் பார்க்க

சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக... மேலும் பார்க்க