செய்திகள் :

பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்

post image

கொச்சியில் பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர தாக்குதலில் 25 இந்தியா்கள், ஒரு நேபாளி உள்பட 26 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கேரளத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியானார். ராமச்சந்திரன் தனது மனைவி ஷீலா, துபையில் பணிபுரியும் மகள் ஆரத்தி மற்றும் அவரது இரட்டை மகன்களுடன் காஷ்மீரில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தார்.

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

அப்போது அவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ராமச்சந்திரனின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் பலியான ராமச்சந்திரனின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.

நிதியமைச்சர் கே.என். பாலகோபால் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன் ஆகியோரும் முதல்வருடன் உடன் சென்றனர். பின்னர் முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்களைச் சந்திக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க