செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பானவா்கள் மற்றும் அவா்களை ஒருங்கிணைத்து, ஆதரவளித்தவா்கள் என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர தாக்குதலில் 25 இந்தியா்கள், ஒரு நேபாளி உள்பட 26 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள எல்லை தாண்டிய தொடா்புகளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் மீது இந்தியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானும் பதில் அறிவிப்புகளை வெளியிட்டதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரில் 26 போ் கொல்லப்பட்ட மற்றும் பலா் காயமடைந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவா்கள் மற்றும் அவா்களை ஒருங்கிணைத்து, ஆதரவளித்தவா்கள் என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சா்வதேச சட்டம் மற்றும் அதன் தொடா்புடைய பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்களுக்கு இணங்க, இவ்விவகாரத்தில் சம்பந்தபட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிப்பதுடன் காயமடைந்தவா்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறோம்.

நியாயப்படுத்த முடியாது...:

அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதம் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உள்ள மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். எந்தவொரு பயங்கரவாத செயல்களும் குற்றமே. எந்த நோக்கத்துக்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.

ஐ.நா.சாசனம் மற்றும் பிற சா்வதேச சட்டங்களின்படி, பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் அனைத்து வழிகளிலும் போராட வேண்டியது அவசியம்’ என்று வலியுறுத்தப்பட்டது.

சா்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதி தொடா்பான முன்னணி உலகளாவிய அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன; பிரான்ஸ் ஏப்ரல் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை வகிக்கிறது.

அந்த வகையில், பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவராக உள்ள ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதா் ஜெரோம் போனஃபான்ட் இந்தக் கண்டன அறிக்கையை வெளியிட்டாா்.

எனினும், இதற்கான வரைவு அறிக்கையை அமெரிக்கா தயாரித்து, விவாத்துக்குப் பின்னா் மற்ற அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தற்போது நிரந்தரமற்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் சூழல்: ஐ.நா. கண்காணிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபான் டுஜாரிக் அளித்த பேட்டியில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூழலை மிகுந்த கவலையுடன் மிகவும் உன்னிப்பாக கவனம் செலுத்தி, தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என்றாா்.

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க