செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு: கைதான சிஆர்பிஎஃப் வீரருக்கும் பஹல்காமுக்கும் என்ன தொடர்பு?

post image

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரருக்கும் பஹல்காமுக்கு இடையேயான தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்திய ராணுவ ரகசியங்கள், ராணுவ நடமாட்டம், முக்கிய ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை அளித்ததற்காகவும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் மோதிராம் ஜாட் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களை இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்த நிலையில், மோதிராம் ஜாட் சிக்கியுள்ளார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்ஐஏ அதிகாரிகள், ஜூன் 6ஆம் தேதி வரை காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஹல்காமில் பணிபுரிந்தவர்..

கைது செய்யப்பட்டுள்ள மோதிராம் ஜாட் என்பவர் பஹல்காமின் சிஆர்பிஎஃப் 116 ஆவது படைப் பிரிவில் பணிபுரிந்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதற்கு 6 நாள்கள் முன்புதான் பஹல்காமில் இருந்து வேறு பகுதிக்கு மோதிராம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால், பஹல்காம் தாக்குதல் நடைபெறுவதற்கு பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தகவலை மோதிராம் பகிர்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டவுடன் மோதிராம் ஜாட்டை பணிநீக்கம் செய்வதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்ததாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ரூ. 25 லட்சம் இழப்புக்கு ரூ. 10,000 உதவித்தொகை! ஜம்மு - காஷ்மீர் மக்கள் அதிருப்தி!

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க