செய்திகள் :

பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவருக்கு இந்தியக் குடியுரிமை

post image

பனாஜி: பாகிஸ்தானில் பிறந்த கிறிஸ்தவரான பிரெண்டன் வெலன்டைன் கிரேஸ்டோ (44), 19 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றாா். பனாஜியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா முதல்வா் பிரமோத் சாவத் குடியுரிமைக்கான சான்றிதழை அவருக்கு வழங்கினாா்.

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இன்னல்களால் பாதிக்கப்பட்டு 2014 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தோருக்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி பிரெண்டன் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளாா்.

இதன் மூலம் கோவாவில் இச்சட்டத்தின்கீழ் மூன்றாவது நபருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த பிரெண்டன், இந்தியப் பெண்ணான மொ்லின் பொ்னாண்டோவை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடிமகனாகியுள்ளாா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜோசப் பிரான்சிஸ் பெரேரா (78) என்ற பாகிஸ்தானில் பிறந்த நபருக்கு முதல்முறையாக கோவாவில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில, 26 வயதே ஆன நிக்கி பாட்டி, வரதட்சிணைக்காக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் திடீர் திருப்பமாக கணவர் விபின் பாட்டி மீது ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்ப... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடக்கு ஒடிசாவின் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 170-க்ம் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலசோர், பத்ராக் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களில் உள்ள 170க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி இ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று 2 நாள் அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகாரப் பூஜை!

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்து இஸ்லாமிய பெண் ரீல்ஸ் எடுத்த நிலையில், பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு புனிதத்தன்மையை மீட்கும் பரிகாரப் பூஜை நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்... மேலும் பார்க்க

டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாதது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருள்களுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரி ஆக.27 முதல் நடைமுறைக்கு வருவதன் காரணமாக பல பொருள்கள் விலை உயர்ந்தாலும், ஆப்பிள் ஐஃபோன்களின் விலை மட்டும் மாற்றமின்ற... மேலும் பார்க்க