செய்திகள் :

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

post image

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன. சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிக்க: துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி என முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. சரியாக விளையாடாததால் பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

புதிதாக கட்டமைக்கும் நேரம்

முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்களை முன்வைப்பதை பார்க்கிறேன். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் நாம் ஏன் பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கக் கூடாது? அதனால் எந்த ஒரு கெடுதலும் வந்துவிடப் போவதில்லை. நாம் தோல்வியடைவோம். ஆனால், குறைந்தது புதிதாக ஏதோ ஒன்றை முயற்சித்திருப்போம். அணியில் உள்ள வீரர்கள் நல்ல வீரர்கள் இல்லை என யாரும் கூறவில்லை. ஆனால், யாராக இருந்தாலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அணியில் இடம்பெற வேண்டும் என்றே கூறுகிறோம் என்றார்.

மழையால் கைவிடப்பட்ட போட்டி; ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும்... மேலும் பார்க்க

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்... மேலும் பார்க்க

துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடவுள்ள போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற... மேலும் பார்க்க

இருவர் அசத்தல் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விள... மேலும் பார்க்க

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன்... மேலும் பார்க்க